* விஷப்பூச்சி, தொற்று நோயால் மனிதன் இறப்பதில்லை. கவலை, வீண் பயத்தால் மட்டுமே இறக்கின்றனர். * மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமம். * பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகு தான் பல உண்மைகள் தெரிய வருகின்றன. * தெய்வத்தை நம்பினால் எல்லாப் பிரச்னைகளில் விடுபட்டு இன்பத்தை அடையலாம். * கடவுளின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது. அவரை நம்பி செயல்பட்டால் எதிலும் வெற்றியே. * உடம்பை வலிமைப்படுத்த விரும்பினால் முதலில் மனதைப் வலிமைப்படுத்துங்கள். * ஒருவருக்கு வீண்பயம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது. * எல்லாவிதமான செல்வங்களுக்கு கல்வியே வேராக உள்ளது. * நடந்தது எப்போதும் மாறாது. அதற்காக வருந்துவது முட்டள்களின் இயல்பு. * அச்சத்தினால் ஒருபோதும் ஒருவரிடம் அன்பினை விளைவிக்க முடியாது. * மனிதர்களில் பலர், தான் தப்பு செய்தால் சுண்டைக்காய் போலவும், அதையே மற்றவர் செய்தால் பூசணிக்காய் போலவும் கருதுகின்றனர். * வேதத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவே புராணங்கள் உருவாக்கப்பட்டன. * உலக நாகரிகங்கள் அனைத்திலும் நம் இந்திய நாகரிகம் மதிப்பு மிக்கது. * மனிதர்களின் எண்ணங்களை மீறியும் கால சக்தி வேலை செய்யும். * கடவுளை நம்பினால் ஒருபோதும் கைவிடமாட்டார். உண்மையான பக்தி அமிர்தம் போன்றது.