* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி உண்டாகும். * தேவைக்கு மேல் அதிகமாக பொருளை சேர்க்க வேண்டாம். * பிறரிடம் யாசகம் கேளாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். * உழைத்து தேடிய பொருளில் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள். * பக்கத்து வீட்டினர் மீது அன்பு காட்டுங்கள். * இறைவனைப் பற்றிய நினைவு இதய அழுக்கைப் போக்கும். * உறவினரை அலட்சியம் செய்தால் அன்பை இழக்க நேரிடும். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும். * செல்வந்தர்களை அலட்சியம் செய்யாதீர். உலகத்தை இழந்து விடுவீர். * சொர்க்கத்தில் இருந்து வந்தது அத்திப்பழம். அதை அதிகம் உண்ணுங்கள். * வெறும் வயிற்றில் பேரிக்காயை உண்டால் இதயம் பலம் பெறும். * குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர். பொன்மொழிகள்