* நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக. * நேர்மையின் பாதையில் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும். * கற்புள்ள பெண் புருஷனுக்கு கிரீடம்; ஆனால் அவமானத்தை உண்டாக்குபவள் எலும்புருக்கி நோய். * கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும். * பேசவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள். * விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு. * சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான். * பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள். * சோம்பேறியே...எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை. * கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். * நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும். பொன்மொழிகள்