பாலைவனப்பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம், வெயிலின் கடுமையால் ‘லுா’ என்னும் வெப்பு நோய் மக்களை தாக்கியது. இதிலிருந்து தப்பிக்க நீண்ட, அடர்த்தியான தலைப்பாகையை முண்டாசாக மக்கள் அணிந்தனர். அங்கு விவேகானந்தர் சென்ற போது அவரை நோய் தாக்காமல் இருக்க ராஜஸ்தான் மன்னர் தலைப்பாகை கட்டிக் கொள்ளும்படி வேண்டினார். விவேகானந்தரும் ஆர்வமுடன் முண்டாசு கட்டப் பழகிக் கொண்டார். பின் அதையே தன் நிரந்தர அடையாளமாக மாற்றினார்.