Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தரிசன டிக்கெட் ஜூன் 30 வரை ... ராமானுஜர் வீடு முன் மர்ம நபர்கள் அட்டகாசம் ராமானுஜர் வீடு முன் மர்ம நபர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் பாரம்பரிய பொன்ஏர் விடும் விழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரியில் பாரம்பரிய பொன்ஏர் விடும் விழா

பதிவு செய்த நாள்

25 மே
2020
01:05

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மழை பெய்ததை தொடந்து அங்கு பாரம்பரிய பொன் ஏர் விடும் விழா நடந்தது.

தமிழக விவசாயிகள் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாள் தங்கள் நிலங்களில் வழிபாடு செய்து முதல் ஏர் உழுவார்கள்.ஆனால் சிங்கம்புணரி விவசாயிகள் பொன் ஏர் இடுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் சித்திரையில் முதல் மழை பெய்ததும், அதற்குப்பிறகு வரும் நல்ல நாளில் இந்த பொன் ஏர் விடும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.  தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாதநிகழ்வு சிங்கம்புணரி கோயிலில் நடைபெறுகிறது.

இங்கு கடந்த வாரம் இந்த தமிழ்புத்தாண்டின் முதல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று பொன் ஏர் விடும் விழா நடந்தது. சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து மரியாதையுடன் தேவஸ்தான ஊழியர்கள், கிராமத்தார்கள், கோயில் பணியாளர்கள், கோயில் நிலத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரும் சென்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் மாடுகளைப் பூட்டி பொன் ஏர் இட்டு இறைவனை வழிபட்டனர். இதே நேரத்தில் சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகள் அனைவரும் அவரவர் குலதெய்வ கோயிலிலிருந்து புறப்பட்டு தங்களது நிலங்களில் பொன் ஏர் இட்டு வழிபட்டனர். முன்பு இந்நிகழ்வு ஒரே நேரத்தில் நடைபெறுவதற்காக கோயிலின் மேல் தளத்தில் நகரம் என்னும் தோல் கருவியால் ஒலி எழுப்பி மக்களுக்கு அறிவிப்பர். பிறகு ஊராட்சிகளில் உள்ள சங்குகளை ஒலிக்க செய்து அறிவித்தனர். காலமாற்றத்தால் அவை மறைந்தாலும் பொன் ஏர் இடும் நிகழ்வு மாற வில்லை. இப்படி சித்திரையில் புதுமழைக்குப் பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது நல்ல மழைக்கும்,நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar