மீனாட்சி அம்மன் கோயிலில் 170 கல்வெட்டுகள் படிஎடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2020 10:05
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.இக்கோயிலுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் நிலங்களை தானம் செய்து உள்ளனர். இதுகுறித்து கல்வெட்டுகள் கோயிலில் ஆங்காங்கு உள்ளன. இதில் சில மட்டுமே படி எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை உயரமான சுவர்களில் இருந்ததால் படி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. நிர்வாக அதிகாரி நடராஜன் முயற்சியால் மீண்டும் படி எடுக்கும் பணி ஓராண்டுக்கு முன் துவங்கியது. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழு இதுவரை 170 கல்வெடுகளை படி எடுத்து விபரங்களை சேகரித்துள்ளனர்.
அவர் கூறியதாவது: வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் 12 அடி முதல் 15 அடி உயரம் வரையுள்ள சுவர்களில் உள்ளன. இக்கல்வெட்டுகள் கி.பி. 13 - 18ம் நுாற்றாண்டுகளை சேர்ந்தவை, என்றார். கோயில் நிர்வாகம், கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பகுதியில் கோயில் நிர்வாகத்தின் கீழ் நிலங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும், என்றனர்.