பதிவு செய்த நாள்
28
மே
2020
03:05
புதுச்சேரி; முதலியார்பேட்டை தொகுதியில் வசிக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.முதலியார்பேட்டை தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாஸ்கர் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்படி, வீடு வீடாக சென்று காய்கறி, அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.முதலியார்பேட்டையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பாஸ்கர் எம்.எல்.ஏ., தனது செலவில் வழங்கினார்.மூன்றாம்கட்டமாக, தொகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பாஸ்கர் எம்.எம்.ஏ., வழங்கினார்.15 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, 5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ கேழ்வரகு மாவு, சேமியா, பிஸ்கட் பாக்கெட் மற்றும் முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கொரோனா பரவும் விதம், தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.