பதிவு செய்த நாள்
28
மே
2020
03:05
திருவாலங்காடு : ஊராட்சியில், சிமென்ட் சாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது, பழங்கால பானைகள் கிடைத்தன. இதை வருவாய் துறையினர் மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழையனுார் காலனியில் இருந்து, ஏரிக்கரையோரம் சிமென்ட் சாலை அமைக்க, நிதி ஓதுக்கீடு செய்து, சாலை போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அங்கு பழங்கால மண் பானைகள் கிடைத்தன. இது குறித்து தகவல் அறிந்ததும், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ், சம்பவ இடத்திற்கு சென்று, பழங்கால பானைகளை பறிமுதல் செய்து, பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்த பானைகள் என்ன வகையானது, எதை குறிக்கிறது என்பது அறிய, தொல்லியல் துறை உதவியை நாட திட்டமிடப்பட்டுள்ளது.