நாயன்மார்களில் ஒருவரான இசைஞானியார் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவனே தனது நண்பனாக ஏற்றுக்கொண்டு, வன்தொண்டன் என்று பெயர் சூட்டியும், தன்னை பித்தன் என்று சொல்லி பதிகம் பாட அருள் செய்யப்பட்டவருமான சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயார் இவர். இவரது கணவரான சடையனாரும் நாயன்மார்களில் ஒருவராவார். ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, பிள்ளை என மூவரும் நாயன்மார்களாக அந்தஸ்து பெற்றது இவர்கள் மட்டுமே. இந்நாளில் சிவன் கோயில்களில் உள்ள நாயன்மார் சன்னதியில் இம்மூவருக்கும் வஸ்திரங்கள் சாத்தி வழிபட வேண்டும்.