பதிவு செய்த நாள்
29
மே
2020
06:05
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி, ஸ்ரீதேவி, பூதேவி சமே த வரதராஜபெருமாள் கோவில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு
வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் சுவாமிகளுக்கு அபிேஷகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள ச ந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு, நேற்று காலை 10.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை , புண்யாகவாஜனம், ஸ்தாபனம், கலச பூஜை நடந்தது. 11:00 ம ணியளவில் சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை ; உலக ம க்கள் நலன்வேண்டி விசேஷ திரவியாபிேஷகம் நடந்தது. பகல் 11:30 ம ணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் இன்றி,அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.