திருமலை: திருப்பதியில் ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தரிசனத்தை துவங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 18ம் தேதி முதல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்தபின், கோவில்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கினால், பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று(மே 28) நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கலந்துரையாடினர். இதில் திருப்பதியில் இருப்பவர்கள் மட்டும் நேரிலும், மற்றவர்கள் வீடியோ கான்பரன்சிங்கிலும் கலந்து கொண்டனர்.