காரியாபட்டி: காரியாபட்டி இசலிமடை அருகே பொட்டல்குளத்தில் கால லிங்கேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் முதன்மையானதாக கருதப்படுவது கால லிங்கேஸ்வரர் தான். மிருகண்டு முனிவர், மருத்துவவதி தம்பதியருக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர். அப்போது கால லிங்கேஸ்வரரை மிருகண்டு முனிவர் மனமுருகி வேண்ட ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தான் மார்க்கண்டேயர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் தற்போது சிதிலமடைந்து சுயம்பு லிங்கம், நந்தி சிலை மட்டுமே உள்ளது.