பதிவு செய்த நாள்
30
மே
2020
05:05
கோவை;கோவில்களில் விதிமுறைகளின் படி, பக்தர்களை அனுமதிக்க கோரி, பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது.இது குறித்து, மனுவில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பெரும்பாலான பூஜாரிகள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள். கோவில் வருவாயை நம்பியே உள்ளனர். கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அரசின் நிவாரண பொருட்களும், உதவித்தொகையும் அனைத்து பூஜாரிகளுக்கும் வழங்க வேண்டும். விதிமுறைகளின் படி, பக்தர்களை கோவில்களுக்குள் அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர்களாக அல்லாதபூஜாரிகளுக்கும், உதவி வழங்கிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெநாதன் சிவம், செயலாளர் வரதராஜன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர், கோரிக்கை மனுவை அளித்தனர்.