திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் அதிக பண வருவாய் கொண்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும்விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் லட்டு விற்பனை மட்டும் தொடங்கப்பட்டது. ஒரு லட்டு 50 ரூபாய் என்பதற்கு பதில் 25 ரூபாய் என்ற அளவில் விற்பனையாவதாகவும், இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், கோயில் ஆலோசனை குழுவை சேர்ந்த திரு.கொமார வெங்கட்ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் இதுவரை சுமார் 10 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர்.