பழநி: பழநி அடிவாரம் வர்த்தகர் சங்கம் சார்பில், கோயில்களில் பக்தர்களை அனுமதிக்கும்படி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் செல்வகுமார் கூறியிருப்பதாவது: ஜூன் 8 முதல் மத்திய அரசு வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அறிவித்துள்ளது. பழநி கோயிலை சுற்றிலும், சன்னதி வீதியிலும் உள்ள 300 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினசரி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். அவர்கள் அந்த வருவாயில் குடும்பத்தை நடத்துபவர்கள்.கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அவர்களை நம்பியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே பக்தர்களை பழநி கோயிலில் அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். சங்க தலைவர் செல்வகுமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.