பதிவு செய்த நாள்
04
ஜூன்
2020
12:06
கோபி: கோபி அருகே மொடச்சூரில், தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், 1999ல், இரண்டாவது கும்பாபி?ஷகம் நடந்தது. மடப்பள்ளி முதல், அர்த்த மண்டபம் வரை, மேல்தளம் கான்கிரீட் வலுவிழந்ததால், திருப்பணிகள் நடத்த துறை ரீதியாக கருத்துரு அனுப்பப்பட்டது. 2018 ஜூலையில், பாலாலயம் நடத்தி, அம்மன் சூலத்திலும், பரிவார தெய்வங்கள், 21 கண்ணாடியிலும், ஆகம விதிப்படி ஆவாகனம் செய்யப்பட்டது. இதனால், கருவறை முதல், வெளிபிரகார அறை வரை, கோவில் மூடப்பட்டுள்ளது.
பாலாலயம் அறையில் குடிகொண்டுள்ள அம்மனுக்கு, மூன்று கால பூஜை நடக்கிறது. திருப்பணி உத்தரவுக்காக காத்திருந்ததால், இரு ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், கோவில் மேல் தளத்தை மட்டும், இடித்து அப்புறப்படுத்தும் பணி, கடந்த பிப்.,17ல் துவங்கி, மார்ச் மாத இறுதியில் நிறைவடைந்தது. அதன்பின், ஊரடங்கு உத்தரவால், மேல்தளம் புதிதாக கட்டமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வால், மேல்தளம் கட்டமைப்பு பணி விரைவில் துவங்குகிறது. இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: மேல்தளம் கட்டமைப்பு பணி, 32 லட்சம் ரூபாயில் நடத்த துறை ரீதியாக, விரைவில் அனுமதி பெறப்படும். அதன்பின், ஏலம் நடத்தி, கட்டமைப்பு பணியை, ஆறு மாதத்துக்குள் முடிக்கப்படும். இப்பணிகள் முடிந்ததும், மூன்றாவது கும்பாபி ?ஷகம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.