பதிவு செய்த நாள்
04
ஜூன்
2020
01:06
நாமக்கல்: திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில், அதன் தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் மனோகரன், உள்ளிட்ட நிர்வாகிகள், கலெக்டர் மெகராஜிடம் அளித்த மனு விபரம்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருத்தேர் விழா, கொரோனா தொற்றால் ரத்து செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம், காலங்காலமாக வைகாசி விசாகத்தன்று, அர்த்தநாரீஸ்வர், ஆசிகேசவ பெருமாள், செங்கோட்டுவேலர் ஆகிய சுவாமிகளுக்கு, திருக்கால்யாண உற்சவம் நடைபெறும். திருச்செங்கோடு கோவிலில் வைகாசி விசாக தினத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள சூழலில், மலைக்கோவில் உட்புறத்திலேயே சுவாமிக்கும், பரிவார தேவதைகளுக்கும் வைகாசி விசாக நட்சத்திரமான நாளை (ஜூன் 4) திருக்கல்யாண உற்சவம் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தியது போல், திருச்செங்கோட்டிலும் நடத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.