கோவை : கோவை மதுக்கரையிலுள்ள, தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். வைகாசி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 3:22 மணி முதல், வரும், 6ம் தேதி அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது. கொரோனா ஊரடங்கால், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, வைகாசி மாத பவுர்ணமிக்கும், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.