* உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக பார்ப்பது கூடாது. * மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை. * சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உங்கள் கைகளில்! * இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம். * சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும். * அடங்காத கோபம் குடும்பத்தின் அமைதியை கெடுத்து அழித்து விடும். * கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகராவாள். * பிறர்க்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து உண்பதே சிறந்தது. * நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு. * மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது. * அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது நல்லது. * நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும். * உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைத்திருக்கும். * நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவவாழ்வின் அடையாளம். * துாய வெள்ளை மனம் படைத்தவருக்கு தீய சிந்தனைகள் உண்டாவதில்லை. * விடாமுயற்சி கொண்டவன் ஒருபோதும் ஏழையாக இருக்க மாட்டான்.