* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான். * சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள். * அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும். * நிதானம் இறைவனின் குணம். அவசரம் ைஷத்தானின் குணம். * குற்றமற்ற பணியாளர் மீது அவதுாறு சொல்வது பாவம். * பசித்தவருக்கு உணவளிப்பவர் மறுமைநாளில் நிழலில் இருப்பர். * நற்செயல்களில் ஈடுபடும் போது விரைவாக செயல்படுங்கள். * பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான். * கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர். பொன்மொழிகள்