பதிவு செய்த நாள்
05
ஜூன்
2020
09:06
சென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண உற்சவத்தை, ஆன்-லைன் வாயிலாக கண்டு தரிசிக்கலாம்.
தொண்டை மண்டலத்தில் அமைய பெற்ற, சிவ திருத்தலங்களில் முதன்மையானது, சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில். இது, மூர்த்தி, கீர்த்தி, தீர்த்தம் ஆகிய மூவற்றிலும், புகழ் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றாகும்.திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், பார்வதி தேவி மயிலுருவில் சாப விமோசனம் பெற்று, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.எனவே, இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
அதன்படி, வைகாசி பவுர்ணமியான இன்று இரவு, 8:00 முதல், 9:30 மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.தற்போது, ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளதால், ஆன்-லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.எனவே, பக்தர்கள், திருக்கல்யாண வைபவத்தை, http://tnhrce.gov.in மற்றும் http:// mylaikapalees warar.tnhrce.in ஆகிய இணையதளம் மூலமாகவும், http://www.youtube.com/c/MYLAPOR EKAPALEESWARARTEMPLE என்று யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டு தரிசிக்கலாம். இவ்வாறு கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.