பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, வீரபாண்டி மாரியம்மன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா, பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது.பிரசித்தி பெற்ற வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, விழா எளிமையாக பக்தர்கள் இல்லாமல் நடந்தது. வீரபாண்டி மாரியம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அலகு குத்தி தேர் இழுத்தல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.