பதிவு செய்த நாள்
05
ஜூன்
2020
12:06
மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் ஆகியவை அமைக்க, விருக் ஷ பீடத்தில் பூமி பூஜை நடந்தது.சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில், விருக் ஷ பீடம் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும், தேவதைகளும், சுவாமி சிலைகளும், நவகிரகங்களை ஆளும் தெய்வங்களின் சுவாமி சிலைகளும், அஷ்டலட்சுமி அதிசூக்கும பீடமும் அமைந்துள்ளன.அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள், அந்த மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இடத்தில், 15 அடிக்கு குழி தோண்டி, அதில் ஆதிபராசக்தி லிங்கமும், அதன் மீது மேடையமைத்து, வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களில் பஞ்சலிங்கமும், 23 அடி உயரத்தில் சிவலிங்கமும் கட்ட, பூமி பூஜை நடந்தது.லட்சுமி தாச சுவாமி தலைமையில், சக்திவேல் குழுவினர் பூமிபூஜையை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதன் பிறகு பஞ்சலிங்க பீடம் அமைப்பது குறித்து, பக்தர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.