கிருஷ்ணராயபுரம்: சிவலிங்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபி?ஷகம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவலிங்புரத்தில் புதிதாக செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டது. கோவில் கும்பாபி ?ஷகத்தை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, கோவில் கோபுர கலசத்திற்கு சமூக இடைவெளியை பின்பற்றி, புனித நீரை கருப்பத்தூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் ஊற்றினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் குறைவாக அனுமதிக்கப் பட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.