திருத்தணி : தணிகாசலம்மன் கோவிலின், 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், 7ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.இதற்காக கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம் மற்றும், 108 சங்காபிஷேகம் நடந்தது.முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.கோவில் குருக்கள் மட்டும் பங்கேற்று, சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.