பதிவு செய்த நாள்
11
ஜூன்
2020
01:06
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ேஷத்திரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத திருவோண நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம்; காலை 9:00 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் விசேஷ திருமஞ்சனம்; காலை 10:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.