ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலை காப்புக்கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவில் அம்பாளுக்கு மலர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.