* ஏழை மீது இரக்கம் வைப்பவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான். * கணவர்களே... உங்கள் மனைவியைக் காதலியுங்கள். அவர்களுக்கு மாறாகக் கசப்பாக இராதீர்கள். * உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே. * துன்மார்க்கன் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால் நீதிமானோ கருணை காட்டிக் கொடுக்கிறான். * உன்னுடைய கண் உன் உடலில் தீபமாயிருக்கிறது. * வெறும் வாய்ப்பேச்சால் பலனில்லை. உழைப்பிற்கு ஊதியம் உண்டு. * சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும். * நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான். * வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள். * சஞ்சலம் உள்ளவன் காற்றடிக்கும் திசை எல்லாம் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான். * கோபத்தில் இருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. * எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போவதில்லை. * உலகத்தை நேசிப்பவனிடம் கடவுளின் நேசம் இராது. பொன்மொழிகள்