கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் கோயில்களில் நடக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2020 11:06
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றி பெறுவதற்காக கோயில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற குறளின் படி பசியும் ஓயாத நோயும் வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இருப்பது சிறந்த நாடு. ஆனால் நாட்டின் நிலைமை தற்போது எதிர்மறையாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் மருத்துவ குழுவினரும் படாத பாடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக தொழில் முடங்கி வருமானம் பாதித்துள்ளது. சீன நாட்டு ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழல் மாற நம்முடைய முயற்சியுடன் கடவுள் அனுக்கிரஹமும் தேவை என்கின்றனர் ஆன்மிக நல விரும்பிகள். அதற்காக நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர். மறைந்த ஜெயலலிதா இதுபோன்ற சூழலில் மக்கள் நலனுக்காவும் கட்சி நலனுக்காகவும் சத்ரு சம்ஹார யாகங்களை நடத்தியுள்ளார். எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றி பெற ஆன்மிக நல விரும்பிகள் யோசனைப்படி கோயில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவது குறித்து அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.