மதுரை: நாளை ( ஜூன் 21) சூரியகிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, கள்ளழகர் கோயில், ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், அய்யப்பன் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில், மேலுார் ஆஞ்சநேயர் கோயில் நடை இன்றிரவு 7:00 மணிக்குள் அடைக்கப்பட்டு, நாளை பகல் 2:30 மணிக்கு திறக்கப்படும். இதைதொடர்ந்து கிரகண தோஷம், திருமஞ்சனம், விஸ்வரூபம், சிறப்பு ஆராதனை நடக்கும் என துணைகமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.* கூடலழகர் பெருமாள் கோயிலிலும் இன்றிரவு 7:00 மணிக்குள் நடைசாத்தப்பட்டு, நாளை பகல் 3:00 மணிக்கு திறக்கப்படும்.