பதிவு செய்த நாள்
20
ஜூன்
2020
03:06
தர்மபுரி: ஆனி மாத
பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில்
நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி
நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, மாலை,
4:30 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட,
பல்வேறு திரவியங்களால் அபி ?ஷகங்கள் செய்யப்பட்டன. 5:00 மணிக்கு மேல்
நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 5:30
மணிக்கு மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு அபி ?ஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள்
அதிகளவில் கலந்துகொள்ளவில்லை. இதேபோல், தர்மபுரி கோட்டை
மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி
ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, பல்வேறு
சிவன் கோவில்களில், ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பூஜைகள் நடந்தன.