பதிவு செய்த நாள்
20
ஜூன்
2020
04:06
பெண்ணாடம் : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் அர்த்தமண்டபத்தில் பஞ்சலோக தகடுகளால் பொருத்தப்பட்ட புதிய கதவு மற்றும் படிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலின் அர்த்தமண்டபம் முன் பித்தளை உலோகத்திலான கதவு மற்றும் கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், மலேசிய பக்தர் முத்துவேல் என்பவரின் காணிக்கையாக, அர்த்தமண்டபம் முன்பு உள்ள கதவு, படிகளுக்கு பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டு, நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து, பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்ட கதவு, படிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக மக்கள் நலன்பெற சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.