காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று சூரியகிரகணம் என்பதால் அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்ட நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு ஏழு கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.