பதிவு செய்த நாள்
22
ஜூன்
2020
09:06
திருப்பதி; திருமலையில், மூன்று மாத இடைவெளிக்கு பின், ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருமலையில் நேற்று முன்தினம், 10 ஆயிரத்து, 93 பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஆன்லைன் மூலம், 6,000 மற்றும் சர்வ தரிசனம் டோக்கன்கள் மூலம், 3,000 என, டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.மூன்று மாதங்களுக்கு பின், ஏழுமலையானை ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்தனர். ஜூன், 26 வரை, நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளன. காலை, 6:30 முதல், 7:30 மணி வரை, வி.ஐ.பி., தரிசனமும், காலை, 7:30 முதல் இரவு, 7:30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். திருமலை மலைப் பாதை காலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 8:00 மணிக்கு மூடப்படுகிறது.