மேல்மலையனுார் கோவிலில் பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2020 11:06
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நான்காவது மாதமாக பக்தர்கள் இன்றி கோவில் பிரகாரத்தில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கடந்த மார்ச் மாதம் முதல் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதில்லை.கோவில் பிரகாரத்தில் பூசாரிகள் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடத்தி வருகின்றனர். மேலும், தினமும் ஆகம விதிப்படி பூசாரிகள் பூஜைகளை நடத்தி வருகின்றனர். அமாவாசையான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7.௦௦ மணிக்கு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் தலைமையில் கோவில் பூசாரிகள் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.