ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2020 10:06
ரிஷிவந்தியம் : கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது.
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நாளை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் ஜூலை 2ம் தேதி தேர் திருவிழா நடைபெறுவதாக இருந்தது.இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் இதுவரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலை வேளைகளில் குருக்கள் மட்டும் அர்ச்சனை செய்து வருகிறார்.