பதிவு செய்த நாள்
24
ஜூன்
2020
10:06
புரி; ஒடிசா மாநிலம் புரியில், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது.
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன், சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.தொலைக்காட்சிஇந்த ஆண்டு, கொரோனா பரவல் காரண மாக, ரத யாத்திரைக்கு தடை கோரப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ரத யாத்திரையை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, வழக்கமான அளவில் பக்தர்கள் இல்லாமல், நேற்று தொடங்கியது. ஜகன்னாதரின் ரதம், 45 அடி உயரத்தில், 16 பெரிய மர சக்கரங்களுடனும், அவரது மூத்த சகோதரர் பாலபத்ராவின் ரதம், 14 சக்கரங்களுடன், 44 அடி உயரத்திலும், அவர்களது சகோதரி சுபத்ராவின் ரதம், 12 சக்கரங்களுடன், 43 அடி உயரத்திலும் தயாராக நிற்க, தங்க துடைப்பம் வீசும் சடங்கு முடிந்ததும், ரத யாத்திரை தொடங்கியது.இந்த விழாவை, லட்சக்கணக்கான பக்தர்கள் தொலைக்காட்சியின் நேரலையில் கண்டு களித்தனர்.
ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, எம்.வெங்கையா நாயுடு, பிரதமர், நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா ஆகியோர் ரத யாத்திரை விழா தொடர்பாக, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.போலீஸ் பாதுகாப்புஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து, ரத யாத்திரையில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், புரியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், இன்று பிற்பகல், 2:00 மணி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது.நகருக்குள் வரும் அனைத்து வழிகளும், சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத்நகரில் உள்ள ஜமல்பூரில், 143 ஆண்டுகளாக நடைபெறும், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரைக்கு, மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் யாத்திரை கோவில் வளாகத்திற்குள் நடத்தப் பட்டது. இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஜமல்பூரில், 143 ஆண்டுகளாக நடைபெறும், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரைக்கு, மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் யாத்திரை கோவில் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று, கோவிலில் ஜகன்னாதர், அவரது சகோததர் பாலபத்ரா, சகோதரி சுபத்ராதேவி ஆகியோரின் சிலைகள், வழக்கமான வழிபாடுகளுடன் ரதங்களில் ஏற்றப்பட்டு, யாத்திரை நடைபெற்றது. இதில், முதல்வர், விஜய் ரூபானி, அவரது மனைவி அஞ்சலி பென் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.