திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுவாமி கற்சிலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால் சிற்பிகள் வருவாயின்றி தவிக்கின்றனர். இங்கு ஏராளமானோர்கருங்கற்களில் சுவாமி சிலைகள் தயாரிக்கின்றனர்.
கொரோனா தடையுத்தரவால் இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் திறக்க, கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதிக்கவில்லை. இதனால் குன்றத்தில் தயாரிக்கப்பட்ட சிலைகள் தேங்கியுள்ளன.சிற்பி முருகன் கூறியதாவது: ஏப்., முதல் ஜூன் வரை கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும். இந்தாண்டும் கும்பாபிஷே கத்திற்காக பல மாநிலங்களிலிருந்து சிலைகள் தயாரிக்க முன்பணம் பெறப்பட்டது. சிலைகள் தயார் செய்துள்ளோம். இதில் ரூ.12 லட்சம் வரை முடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் தான் சிலைகளை ஆர்டர் கொடுத்தவர்கள் வாங்கிச் செல்வர், என்றார்.