திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொந்தகை அகழாய்வில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள், பானைகள் மரபணு ஆய்விற்காக மதுரை காமராஜ் பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் கிடைத்து வரும் முதுமக்கள் தாழிகள் 2ம் நிலையை சேர்ந்தவை.வேறு இடத்தில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து வந்து இங்கு புதைத்துள்ளனர்.
அப்படி புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து புதைத்துள்ளனர். அதில் அழகிய வடிவமைப்புடன் கூடிய சுமார் 2லிட்டர் தண்ணீர் பிடிக்கும் தண்ணீர் அருந்தும் கூஜா, கிடைத்துள்ளது. இதில் கூஜாவின் வாய்ப்பகுதி குறுகியும், உட்புறம் விரிந்தும் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூலிகை வண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. தண்ணீர் கூஜா பெரும்பாலும் வாய்ப்பகுதி நீண்டு இருக்கும், ஆனால் இங்கு குறுகிய அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுஅகரத்தில் பானை ஓடுகள் , பானைகள், தங்க நாணயம், நத்தைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. நேற்று முன்தினம் கருப்பு பானைகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றும் பானை கண்டறியப்பட்டுள்ளது. சேதமடைந்த நிலையில் உள்ள இந்த பானையை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்விற்காக சேகரித்துள்ளனர்.