திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.57 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.57 லட்சம் வருவாய் கிடைத்தாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.