பதிவு செய்த நாள்
25
ஜூன்
2020
10:06
சென்னை : சென்னையில், இஸ்கான் சார்பில், ஜகன்னாத் ரத யாத்திரை நடந்தது. ரதத்தில் வலம் வந்த ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா ஆகியோர் அருள் பாலித்தனர்.
ஒடிசா மாநிலம், புரியில் ஆண்டுதோறும் ஜகன்னாத் யாத்திரை விமரிசையாக நடக்கும். அதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். அதை முன்னிட்டு, சென்னையில், ஆண்டுதோறும் ஜனவரியில், ஜகன்னாத் யாத்திரை நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல், புரியில் நடக்கும் நாளில் நடத்த, இஸ்கான் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, இஸ்கான் கோவிலில் ஜகன்னாத் ரதயாத்திரை, உற்சாகமாக நடந்தது. ரதத்தில், ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா வலம் வந்து, அருள் பாலித்தனர். பின், ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்றனர். ரதயாத்திரையை ஆன்-லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.