Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாரையும் அலட்சியப்படுத்தாதீர் நுாறாண்டு காலம் வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நரசிம்மர் அருளால் நலமுடன் வாழ்க
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
01:06

திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிப்பெரியவரின் தீவிர பக்தராக இருந்தார் ஒரு அன்பர்.  மகாசுவாமிகளை வணங்காமல் எந்தச் செயலையும் செய்ய மாட்டார். சுவாமிகளே அவருக்கு கண் கண்ட தெய்வம்.
நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல் தவித்த அவருக்கு நல்ல காலம் பிறந்தது. மனைவி கருவுற்றாள். குழந்தை  நல்ல படியாகப் பிறக்க வேண்டும் என்று சுவாமிகளைப் பிரார்த்தித்தார்.
மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். குழந்தை பிறந்ததும் மகாசுவாமிகளிடம் குழந்தைக்கு பெயர்சூட்ட வேண்டும் என வேண்டிக் கொண்டார். வளைகாப்பு வைபவம் சிறப்பாக நிறைவேறியது.
தாய் வீ்ட்டுக்குப் புறப்பட்டாள் மனைவி. அன்றிரவு களைப்பால் சீக்கிரம் கண் அயர்ந்தாள். அதிகாலையில் அவளின் கனவில் நரசிம்ம சுவாமி ஒளிவீசும் முகத்துடன் தோன்றினார். ‘‘உனக்கு ஆண்குழந்தை பிறக்கும். ‘நரசிம்மன்’ என்று பெயரிடு’ என்று உத்தரவிட்டார்.  
கண் விழித்த அப்பெண்ணுக்கு துாக்கம் வரவில்லை. கணவரிடம் கனவை விவரித்தாள். சிந்தனையில் ஆழ்ந்த கணவர், ‘‘நரசிம்மர் இட்ட உத்தரவை நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் நேருமே... வேண்டுதல்படியே மகாசுவாமிகளிடம் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொல்வதா?’’ என்ற குழப்பம் ஏற்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு என்ன செய்யலாம் என யோசிப்போம் என்று  பிரச்னையை அப்போதைக்கு அவர்கள் ஒத்தி வைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. தங்களின் வேண்டுதல்படி குழந்தையுடன் காஞ்சிபுரம் சென்றனர்.  சுவாமிகளின் முன் குழந்தையைக் கிடத்தி வணங்கினர். குழந்தையை அருள் பொங்க பார்த்தார் சுவாமிகள்.
கனவில் தோன்றி நரசிம்மர் இட்ட கட்டளையை சொல்லலாம் என மனைவி வாய் திறந்தாள். ஆனால் குறுக்கிட்ட சுவாமிகள்,  ‘‘இது ஆண் குழந்தை தானே?’’ எனக் கேட்டார்.
அவளும் தலையசைத்தாள்.
‘‘பக்த பிரகலாதனுக்கு அருள்புரிந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான ‘நரசிம்மா’ என்று வாய் நிறையக் கூப்பிடுங்கள். இவன் அவர் அருளால் நலமாக வாழ்வான்’’ என ஆசியளித்தார். சுவாமிகளின் தீர்க்க தரிசனத்தைக் கண்ட தம்பதி கைகூப்பி நின்றனர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar