பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
04:07
சென்னை; ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில், ஒரு வீட்டில் கிடைத்த பழங்கால வெளிநாட்டு காசுகள், அவ்வூருக்கும், வெளிநாடுகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாக உள்ளன.தமிழக தொல்லியல் துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வுகள் செய்யப்பட்டன.
அதில் கிடைத்த தொல்பொருட்கள், 2,400 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என, தெரியவந்துஉள்ளது. நிகழ்கால சான்றுஇந்நிலையில், அங்கு உள்ள அசோகன் என்பவரின் வீட்டில், பழைய இரும்பு பெட்டியில் இருந்த காசுகளை, ஆய்வு செய்த போது, அவை, பழமையான வெளிநாட்டு, உள்நாட்டு காசுகள் என்பது தெரிய வந்துள்ளது. இது, அழகன்குளம் மக்கள், பிற நாடுகளுடன் கொண்டிருந்த வணிக தொடர்புக்கான, நிகழ்கால சான்றாக உள்ளது.இது குறித்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர், ராஜகுரு கூறியதாவது:அழகன்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் அசோகனின் முன்னோர்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியில், இவ்வூரினர் பலர், இலங்கையில் குடியேறினர். அதனால், அவர் வீட்டில் இருந்த பழைய பெட்டியில், ராஜராஜன் இலங்கையை வென்ற பின் வெளியிட்ட ஈழக்காசு, இலங்கை, இங்கிலாந்து நாடுகளின் வெள்ளி, செப்புக் காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் என்னும் வெள்ளிக்காசு ஆகியவை கிடைத்துள்ளன.
கடந்த, 1096ல் வெளியிடப்பட்பட திருவிதாங்கூர் மலையாள காசில், திருநாள் ராமவர்மா என்பதை குறிக்கும் வகையில், ஆர்.வி., என்னும் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. 7ம் எட்வர்டுஅதேபோல், இலங்கை செப்பு சதம் காசில், இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனையின் படம் உள்ளது. இதில், சிங்களத்திலும், தமிழிலும் சதம் என, எழுதப்பட்டுஉள்ளது. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா, 5, 6ம் ஜார்மன்னர் காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசுகள், பிரிட்டனின், 7ம் எட்வர்டு வெளியிட்ட பென்னி நாணயமும் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.