பதிவு செய்த நாள்
03
ஜூலை
2020
01:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், தொடர்ந்து, 4-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் வரும், 31- வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஜூலை மாத பவுர்ணமி நாளை, 4ல், நண்பகல், 12:02 மணிக்கு தொடங்கி, 5ல், காலை, 10:58 மணிக்கு முடிகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக சேர்ந்தால், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது.