Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலம் மாறலாம்! நம் தர்மம் மாறுமா... தலைவாசலுக்கு நேரே தலை வைத்துப் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதலில் சாப்பிடு! பிறகு பேசலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
05:07


 மகாசுவாமிகளின் பக்தர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தார். தினமும் சுவாமிகளை வழிபட்ட பின்னரே அன்றாடப்பணிகளை கவனிப்பார். அவர் ஒருமுறை இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. பயணத்தின் போது சுவாமிகளை தரிசித்த பிறகே பணிகளில் ஈடுபட வேண்டும் என உறுதி கொண்டார்.
அந்த எண்ணம் நிலையாக இருக்க வேண்டும் என யோசித்தார். அதற்கும் ஒரு உத்தியைக் கண்டுபிடித்தது அவரது மனம்.
விமான நிலையத்திற்கு வந்ததில் இருந்து எதையும் அவர் சாப்பிடவில்லை. பல மணிநேர விமானப் பயணம். என்றாலும் சுவாமிகளின் திருநாமத்தை ஜபித்தபடியே இருந்தார். சுவாமிகளை தரிசித்த பின்னரே ‘தண்ணீர் கூட குடிப்பேன்’ என கட்டுப்பாடுடன் இருந்தார்.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் வாடகைக் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார்.
அப்போது இரவு பத்து மணி இருக்கும்.
மடத்தில் உறங்கப் போன சமையல்காரரை அழைத்தார் மகாசுவாமிகள்.
‘ரவை இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
‘‘இருக்கிறது சுவாமி’’ என்றார் அவர்.
‘‘கொஞ்சம் உப்புமா கிண்டு. ஒருவர் தாராளமா சாப்பிட்டுப் பசியாறும் அளவு உப்புமா இருக்கணும். தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலைச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி தயார் செய். அரைமணி நேரத்தில் தயாரானால் நல்லது!’’ என்றார் சுவாமிகள்.
சமையல்காரருக்கு ஆச்சர்யம்.
‘இப்படியெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிட்ட மாட்டாரே? அதுவும் ராத்திரி பத்து மணிக்கு உப்புமா கேட்கிறாரே? விருப்பப்பட்டு கேட்பதால் நல்ல ருசியாக செய்யணும்’ என சிந்தித்தபடி உப்புமா தயாரித்தார்.  
‘‘சாப்பிட உப்புமா கொண்டு வரலாமா?’’ என சுவாமியிடம் ஆவலுடன் கேட்டார்.
கலகல என சிரித்த சுவாமிகள் ‘கொஞ்சம் காத்திரு!` என்றார்.
அதற்குள் சென்னையிலிருந்து கிளம்பிய வாடகைக்கார் காஞ்சிபுரம் வந்தது. ஸ்ரீமடத்திற்கு வந்த பக்தர் சுவாமிகளை தரிசித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். தழுதழுத்த குரலில் பேச முயற்சித்தார்.
‘‘பேச்செல்லாம் அப்புறம். சாப்பிடாமல் என்னைப் பார்க்க வந்திருக்க! முதலில் சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம்’’ என்றார்
சமையல்காரரிடம், ‘‘இவருக்குத்தான் உப்புமா செய்யச் சொன்னேன். இப்போது நீ பரிமாறலாம்’’ என்றார் சுவாமிகள். அதைக் கேட்டதும் வெளிநாட்டு பக்தருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar