மதுரை: நேற்று(ஜூலை 4) சுவாமி விவேகானந்தர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காந்தி அருங்காட்சியக காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் பேராசிரியர் தேவதாஸ் மற்றும் நேதாஜி தேசிய இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.