Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமூக இடைவெளி இல்லை: கோவில் அன்னதானம் ... திருச்சுழி பூமிநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு திருச்சுழி பூமிநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் மக்கள் வழிபடும் புலிக்குத்தி கல்
எழுத்தின் அளவு:
மடத்துக்குளம் மக்கள் வழிபடும் புலிக்குத்தி கல்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
03:07

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே பல நூற்றாண்டு களுக்கு முன்பு முன்னோர்களால் அமைக்கப்பட்டு இன்றும் மக்களால் வழிபடும் " புலிக்குத்தி" கல்லை பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் தாலுகா வடக்கு கண்ணா டிப்புத்தூர் பகுதியில் விளைநிலங்களுக் கு அருகிலுள்ள ஒரு கற்சிலையை " தலைமுட்டி சாமி" என மக்கள் வழிபடு கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்" இங்கு வசிக்கும் மக்கள் தலைவலி, உடல்வலி போன்ற நோய்கள் ஏற்பட்டால் இந்த சிலைக்கு முன்பு வெற்றிலை ,பாக்குடன் ஒண்ணேகால் ரூபாய் காணிக்கை வைத்து வணங்கு கின்றோம். இதோடு இதன் நெற்றியில் தங்களுடைய நெற்றியை மூன்று முறை முட்டி வழிபடுகிறோம். இதனால் இது "தலைமுட்டிசாமி "என அழைக்கப்படுகி றது. இது எந்த காலகட்டத்தில் அமைக்கப் பட்டது என தெரியவில்லை. புதர்களுக்கு மத்தியில் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இயற்கை சீற்றம் காலச் சூழல் காரணமாக இந்த வரலாற்று நினைவுச் சின்னம் சிதைந்து போகவும்,உடைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர் க்க போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் தேவை" என தெரிவித்தனர்

இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில் " சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்திருக் கலாம். அன்றைய காலகட்டத்தில் கால் நடை களை பாதுகாக்க, வீரர்களை நியமிப்பது உண்டு. புலி அல்லது காட்டு மிருகங்கள் கால்நடைகளை வேட்டையாட வரும் பொழுது இந்த வீரர்கள் தடுத்து நின்று போராடி புலியை குத்திக் கொன்ற தன் நினைவாக இது போன்ற சிலைகள் அமைப்பது வழக்கம். இது" புலிகுத்திகல்" எனகுறிப்பிடப்படுகிறது. இரண்டு அடிக் கும் மேலான உயரத்தில் 3 அடி அகலத் தில் சிலை உள்ளது. இதில் ஒரு வீரன் புலியை எதிர்த்து நின்று போராடுவது போலவும் அவன் கையில் உள்ள கத்தியை புலியின் வயிற்றில் குத்துவது போலவும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மக்கள் "தலைமுட்டிசாமி" யாக இதை வழிபட்டாலும், இது கடந்தகால வரலாறு கூறும் "புலிக்குத்திகல்" ஆகும்" என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar