திருக்கோவிலூர்: கனகனந்தல் கிராமத்தில் நடக்கவிருந்த முருகன் கோவில் தேர் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.
திருக்கோவிலூர் அடுத்த கனகனந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். இந்த ஆண்டும் பங்குனி உத்திர விழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டிய நிலையில், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்திருவிழா ஒத்திவைக்கப் பட்டது. பெரும்பான்மையான பக்தர்கள் காப்பு கலைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர். ஒரு சில பக்தர்கள் மட்டும் காப்புகளையாமல் எப்படியும் விழாவை நடத்தி விடுவது என காத்திருந்தனர்.
இச்சூழலில் கிராம கோவில்களுக்கான பூஜையில் அரசு தளர்வு அளித்ததால் அதனைப் பயன்படுத்தி விழா நடத்த ஒரு சிலர் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், வி.ஏ.ஓ., கோவிந்தன் கிராமத்தில் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பங்குனி உத்திரத் திருவிழாவை அடுத்த ஆண்டு நடத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்காரணமாக காப்பு அணிந்து விரதம் இருந்த ஒரு சிலரும் காம்புகளைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர்.