மரக்காணம் : மரக்காணத்தில் குளம் துார் வாரிய போது, மகா விஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், பூமிஸ்வரன் கோவில் அடுத்த கரிப்பாளையம் பழைய எட்டியான் குளம, குடிமராமத்து திட்டத்தின் கீழ், துார் வாரும் பணி நடக்கிறது. நேற்று, பொக்லையன் இயந்திரம் மூலம் குளத்தின் மையப் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, நான்கு அடி உயரம் உள்ள மகா விஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் சிலையை மீட்டு, பூமிஸ்வரன் கோவில் வளாகத்தில் வைத்து பூஜை செய்தனர். மரக்காணம் தாசில்தார் ஞானம், சிலையை பார்வையிட்டார். சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது.