பதிவு செய்த நாள்
08
ஜூலை
2020
05:07
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில், அப்பாவு நகர் செல்வகணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.